Categories
அரசியல் மாநில செய்திகள்

”சீமான் இப்படி பேசாதீங்க” தனிமைப்பட்டு போவீங்க – அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் …!!

 ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை சீமான் தவிர்த்திருக்கலாம் என்றும்  சீமான்தான் தனிமைப்பட்டு போவார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வந்தாரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு அனைத்து மக்களும் வாழும் அமைதிப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெங்காய வெடி வாங்க முடியுமா ? ”தகுதியற்றவர் சீமான்” கராத்தே தியாகராஜன் கருத்து …!!

வெங்காய வெடி கூட வாங்க தகுதி இல்லாதவர் சீமான் என்று காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், சீமான் தனது பேச்சால் தமிழகத்தில் எங்குமே நடமாட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் எதிர்வினை ஆற்றாமல் தமிழ்நாடு காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சீமான் வெங்காய வெடி கூட வாங்க தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த தேர்தல் வந்தாலும்….. ”அதிமுக வெற்றி நிச்சயம்”…. OPS உறுதி …!!

நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொழுப்புத்தனமான பேச்சு….. ”வாடகை கொடுக்க வக்கில்லை” சீமானை வெளுத்த அமைச்சர் ..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து கொழுப்புத்தனமான பேச்சு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டித்துள்ளார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது முட்டாள்தனமான மடத்தனமான வார்த்தை என்றார். தமிழன் எதிரிக்கு கூட துரோகம் இழைக்காதவன். ராஜீவ் காந்தியின் கொலை தமிழக மண்ணில் நடந்ததையே கேவலமாகக் கருதுபவர்கள் தமிழக மக்கள். அப்படியிருக்கையில் ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மறைந்த தலைவர்களை பேசாதீங்க” சீமானுக்கு G.K வாசன் அட்வைஸ் …!!

மறைந்த தலைவர்களை அவதூறாகப் பேசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசுவது ஒரு போதும் ஏற்கக்கூடியது அல்ல, அது தவிர்க்கப்பட வேண்டும். அது பயங்கரவாதம், தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், அடக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாங்குநேரி அதிமுக […]

Categories
அரசியல்

”எல்லாமே திமுக தான்” கருத்துக்கணிப்பில் அரண்டு போன அதிமுக …..!!

நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமானுக்கு சங்கு ….. ”ஆப்பு வைக்கும் தேர்தல் ஆணையம்”…. விரிவான அறிக்கை …!!

சீமானின் சர்சை கருத்து குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …!!

சீமானின் சர்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……!!

ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்று H.ராஜா தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…..!!

 ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜசேகர் புகாரளித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’சீமான் ஒரு அரசியல் தலைவர்போல் செயல்படவில்லை’- நாராயணசாமி

சீமானின் செயல்பாடுகள் எதுவும் அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். இது இந்தியாவை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ராஜிவ் காந்தியை கொச்சைப்படுத்தி விக்கிரவாண்டியில் சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தலைவர்களை இழிவாகவும் பேசிவருவது சீமானின் பழக்கமாக உள்ளது.திரைப்பட இயக்குநராக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கதருக்குள் காவி-காவிக்குள் கதர்…! – காங்., பாஜகவை கலாய்த்த சீமான் …!!

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராஜிவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு, விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். இலங்கைத் தமிழர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிதம்பரத்த வெளிய எடுங்க …. என்ன உள்ள போடுங்க ….. போராடுங்க ….. பின்வாங்க மாட்டேன் …. சீமான் கருத்து …!!

ராஜிவ் காந்தி குறித்து பேசியதை திரும்ப பெற மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டை சுற்றிய போலீஸ் ….. கைதாகும் சீமான் …… பரபரப்பில் அரசியல் களம் …!!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசிய சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : நாங்குநேரி,விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதில் , விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21 வாக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking : தமிழகம் , மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் ,  ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : தமிழகத்தில் அக்.21 இடைத்தேர்தல்…!!

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஒரே நாடு , ஒரே தேர்தல்” தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பு…..!!

தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட், ஹரியானா , மகாராஷ்டிரா , டெல்லி ஆகிய நான்கு மாநிலங்க  அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு என்பது இதே மாதம் தான் நடைபெற்றது.அக்டோபர் மாதம் 15ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ”இடைத் தேர்தல்” தேதி இன்று அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ இந்த ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மகாராஷ்டிரா , […]

Categories

Tech |