சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் சார்பாக 75-வது சுதந்திர தின விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் தேசியக்கொடியின் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட கலெக்டர் உலகத்தின் […]
