பூம்புகார் அருகே மீனவர் வீட்டில் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையையும் , ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில்நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை […]
