கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண ஊஞ்சல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினர். இதில் மாணவர்கள் வேஷ்டி சட்டையுடன் மாணவிகள் கேரளா சேலையும் அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மக்களால் பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் விழா, பருவ […]
