சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நல்லியான் தோட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிந்தாமணி என்பதும், சட்டவிரோதமாக தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிந்தாமணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
