Categories
மாநில செய்திகள்

‘காவலன் செயலி’ குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்

பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை ‘காவலன் SOS’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘காவலன் SOS’ பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர்..!!

தரங்கம்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று 11ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு படிக்கும் 126 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இவ்விழாவில் சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன், பள்ளி தலைமை ஆசிரியர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : எம்ஜிஆர் பாடலைப் பாடி பதிலளித்த அமைச்சர் …!!

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியிடம் அத்துமீறிய இருவர்… பாய்ந்தது போக்ஸோ!!

மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு 25 வயதாகிறது. இவர் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.சம்பவ தினத்தன்று அந்த சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்றுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சந்தோஷ் வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீ….. சீ….. ரோடா இது ? ”நாற்று நட்ட திமுகவினர்” போராட்டம் நடத்தினர்…!!

இரண்டு மாதங்களாக சரி செய்யாமல் சேறும் சகதியுமாய் கிடக்கும் மயிலாடுதுறை நகராட்சி சாலையில் திமுகவினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பட்டுவரும் பாதாள சாக்கடையால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த முக்கிய சாலைகளில் ஏற்படும் உடைப்பால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மயிலாடுதுறை – தரங்கம்பாடி செல்லும் கொத்தத்தெரு சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘பைக்கில் மின்னல் வேகம்’ – இரவில் செல்போன் திருடும் கும்பல்; 6 பேர் கைது!

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போனை பறித்து திருடிச்செல்லும் கும்பலை காவல் துறை கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு! தாயே மகளை கொளுத்திய கொடூரம்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜ‌னனி. பதினொன்றாம் வகுப்பு இடைநின்று வீட்டிலிருந்த ஜன‌னி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ராஜ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு முறை வீட்டை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம்… உங்களை தேடி நான் வருகிறேன்: நாகை எஸ்.பி அதிரடி.!!

என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம், உங்களை தேடி நான் வருகிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு பலகை வைத்து புகார் மனு வாங்கும் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் கடந்த 7ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வாரநாட்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் முதியவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிரம்பிடுச்சு …. 12 மாவட்டம் உஷார் …. மேட்டூர் அணை நிரம்பியது …!!

தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பிய மேட்டுர் அணை…. ”12 மாவட்டம் உஷார்” வெள்ள அபாய எச்சரிக்கை….!!

மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்பேத்கார் சிலை உடைப்பு : 11 பேர் மீது குண்டாஸ்….!!

அம்பேத்கார் சிலை உடைப்பில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் உள்பட 11 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25_ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிக்கப்பட்டு அதற்க்கு எதிர்வினையாற்றும் வகையில் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு நிலவியது. மேலும் அம்பேத்கார் சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற  கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும்” ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சமீபத்தில்  தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5  புதிய மாவட்டங்களை புதிதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு மயிலாடுதுறை பகுதி  மக்களும் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று  கடந்த ஒரு மாதத்திற்கும்  மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றனர்.பல ஆண்டுகளாகவே மயிலாடுதுறை கோட்ட மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் […]

Categories
தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை மேட்டூர் அணை நீர் திறப்பு…. கடைமடை வரை செல்லுமா நீர்..?

நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“8 பேருக்கு அரிவாள் வெட்டு, 2 பேர் பலி” நாகை அருகே பதற்றம்…!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவுருகிறது.  நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அந்த ஊராட்சி  கிராமத்தின் நாட்டாமையாக உள்ளார். அரசியல் கட்சி ஒன்றின் செயலாளராகவும் அவர் இருக்கிறார்.ஆனால் அவர் நாட்டாமையாக இருக்க தகுதி இல்லை என்று , அதே பகுதி வேல்முருகன் மற்றும் அவரது  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு, […]

Categories

Tech |