சென்னை கோட்டூர்புரத்தில் பண பைகளை வீசி சென்றது மர்ம நபர் யார் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கோட்டூர்புரம் அருகேயுள்ள வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் சதேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சுற்றி வருவதாக சொல்லப்பட்டதைஎடுத்து போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்றிரவு சுமார் 2.30 மணியளவில் சந்தேகப்படும் அந்த நபர் போலீஸ் கண்களில் சிக்கியதால் அவரின் வாகனத்தை நிறுத்த போலீசார் முயன்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட அந்த நபர் போலீஸ் நிறுத்தியும் […]
