மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிலாவூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறி அவரது குடும்பத்தினரிடம் கடந்த மாதம் பத்து லட்சம் ரூபாய் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு குடும்பத்தினர் பணம் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீனிவாசன் தனது மனைவி நாசி மற்றும் மகனை வீட்டை விட்டு […]
