முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன் என்று மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முத்தலாக் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் எதிராக வாக்களித்தனர். இதனால் அதிமுக முத்தலாக் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தது. அதிமுகவிலும் சற்று சலலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார் […]
