இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், […]
