நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அறிவொளி நகரில் முருகேஷ் என்ற சவுரிமுடி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற இரண்டாவது மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பார்வதியின் நடத்தையில் சந்தேகம் வந்தால் முருகேஷ் அவரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். […]
