உத்தர பிரதேசத்தில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் […]
