இரண்டு சிறுவர்கள் கொரோனா தொற்றினால் தனது தாய், தந்தை, பாட்டி என மூவரை பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி பகுதியில் தன்ராஜ் என்ற மருந்து கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விபின், சாமுவேல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து […]
