கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கல்லூரியில் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்காததால் ஏராளமானார் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாலிபர்கள் […]
