சாலையில் அடிபட்டு கிடந்த குரங்கின் உயிரை காப்பாற்றிய நபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செம்பாகுறிச்சி மற்றும் அனுமனந்தல் ஆகிய கிராம எல்லைப்பகுதியில் வீ. கிருஷ்ணாபுரம் காப்புக்காடு அமைந்திருக்கிறது. இங்கு இருக்கும் குரங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பழங்கள் மற்றும் உணவுகளை வழங்கி செல்கின்றனர். இதனால் உணவுக்காக குரங்குகள் காப்பு காட்டை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிவதை காணமுடிகின்றது. இதனையடுத்து சாலையில் சுற்றி திரிந்த […]
