மொடக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் உடும்பைப் பிடித்து அதனை கொன்ற குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்ட வனத் துறையினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் சாலைப்பகுதியில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர் கொண்டுவந்த சாக்கைப் பரிசோதனை செய்தனர்.. […]
