பணப்பரிவர்த்தனைக்கான அப்டேட்களை இந்த மாத இறுதியில் வெளியிடப்போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனக்குப் போட்டியாக வரக் கூடிய செயலிகளை ஒன்று விலைக்கு வாங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். அப்படி இல்லை எனில் அதற்கு போட்டியாக தனது செயலி மூலமே புதிய அப்டேட்களை விட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது வழக்கமாக கொண்டுள்ளது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலி உலகில் அதிக நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அதனை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. […]
