உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்கின்றனரா என கண்காணிப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன […]
