கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூபாய் 3,550 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்னியாகுமரி மாநகராட்சி நேற்று அதற்கான வசூல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில், இருசக்கர வாகனம் , […]
