தனது மனைவி என்றும் பாராமல் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்த சைக்கோ ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகேயுள்ள மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (42). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி கனகா (32), மூன்று குழந்தைகள் உள்ளனர். பத்து வருடத்திற்கு முன்பு கனகாவும், சண்முகமும் திருமணம் செய்து கொண்டனர். கனகாவிற்கு 17 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்து விட்டனர். பின்னர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். […]
