இ-பாஸ் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து முதல்வர் பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் அவர்களின் நலன் ஆகியவை குறித்து விசாரணை நடத்தினார்.. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அதிகப்படியான எண்ணிக்கையில் பிசிஆர் சோதனைகள் […]
