சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து […]
