நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த இயக்கம் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ராயபுரம் பகுதியில் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடத்தையும் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ குடியுரிமைச் சட்டத்திற்கு ரஜினிக்கு முன்பே எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போதுதான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசிவிட்டது. இலங்கைத் […]
