மெக்சிகோ நாட்டில் குடும்ப விழாவில் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் ஒரு குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மர்ம நபர் அந்த விழாவில் புகுந்து திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் எதற்கு இறந்தோம் என்றே தெரியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
