ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் சாம்ராஜ். இவர் ஒரு ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி கந்திலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பொங்கல் விடுமுறைக்காக சாம்ராஜ் திருப்பத்துருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சாம்ராஜ் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். […]
