கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், பல குடும்பங்கள் வேலைக்கு செல்ல வாய்ப்பு இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், முழு கல்வி கட்டணம் செலுத்த பெற்றோர்களை பள்ளிகள் […]
