மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி 2-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனியர் மாணவர்கள் சரவணனை ராக்கிங் செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் இருக்கும் மருத்துவ கல்லூரி கமிட்டிக்கு சரவணன் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் […]
