தமிழக மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவருக்கும் , 15 சதவீத இடங்கள் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 126 வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர். எனவே இந்த மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்து , புதிய கலந்தாய்வு […]
