பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ 6 கோடி பரிசும், சிங்க்ராஜ் அதானாவுக்கு ரூ 4 கோடி பரிசும் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.. பலரும் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே […]
