விற்பனை குறைவாக இருப்பதால் தினசரி 50 டன் மாம்பழங்கள் தேகம் அடைகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே வியாபாரிகளுக்கு அதிக அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வைத்தால் அவை சீக்கிரம் அழுகி விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. […]
