மாணவ-மாணவிகள் ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் முதுகலையின் கணித ஆசிரியர் சூசைமரியநாதன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் இவரை மற்றொரு பள்ளிக்கு ஆசிரியராக இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும் தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]
