கள்ளநோட்டு மாற்ற முயன்ற வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தையில் 100 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் முயன்றுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், கள்ளநோட்டு மாற்ற முயன்ற சுதர்ஷனை கைது செய்தார். அவரிடமிருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் […]
