மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணாங்குப்பம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விஜயகுமார், சத்தியநாதன் மற்றும் சீனிவாசன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறை […]
