அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மேலும் பெயிண்டராக வேலை பார்க்கும் இருவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை எழுப்பி கிருஷ்ணமூர்த்தி பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஆறுமுகம் பணம் கொடுக்காததால் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது அண்ணன் என்று கூட பார்க்காமல் தான் வைத்திருந்த கத்தியால் அவரை […]
