கொரோனா சிகிச்சைக்கு பயந்து வாலிபர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேல் பரிசோதனைக்காக சுகாதார அலுவலர்கள் வாலிபரை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை முடிந்து […]
