பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
