அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை பராமரிக்கும் பணியை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முருகேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]
