நூதன முறையில் வாலிபரிடம் மோசடி செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிகேணியில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தினேஷுக்கு சையது பக்ருதீன், முகமது மானஸ் மற்றும் மீரான் மொய்தீன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர்கள் 3 பேரும் இணைந்து ஷேர் மீ என்ற செல்போன் செயலியில் வரும் வீடியோக்களை லைக் செய்து “ஸ்க்ரீன் ஷாட்” […]
