பிள்ளைகளின் தற்கொலைக்கு காரணமான தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனலட்சுமி, திவ்யா என்ற 2 மகள்களும், விக்னேஸ்வரன் என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் தனலட்சுமி பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதன்பின் ஒரு தனியார் பள்ளியில் திவ்யா 11-ஆம் வகுப்பும், விக்னேஸ்வரன் 8-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். […]
