ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணி என்கிற மணிகண்டன் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி பட்டா கத்தியால் தலையில் வெட்டினார். பின்னர் மீண்டும் […]
