மதுராந்தகம் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளக்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழு கொள்ளளவை எட்ட 4 அங்குலமுள்ளது. இந்த நிலையில் ஏரிகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில் துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு இருப்பது இதற்கு காரணமாகும். ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் […]
