மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புளியங்குளத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சாமி கும்பிடுவதற்கு சித்தாலி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக முருகன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி முருகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் […]
