கோழி கடையின் பின்புறத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோழி கடையின் பின்புறமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் மதுபாட்டில்களை விற்பனை செய்த ரகு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
