கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ரூ 83,52,000 நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் குடியேறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை […]
