ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா?, நீக்கப்படுமா?, படிப்படியாக தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 35 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களின் மனநிலை, வளவதாரத்தை […]
