உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் அருகிலுள்ள நாடுகள் வழியாக ஏர் இந்தியா விமானம் மூலமாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சகீர், சாந்தனு, செல்வபிரியா, ஹரிஹரசுதன், வைஷ்ணவிதேவி ஆகிய 5 மாணவர்கள் ருமேனியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மும்பை வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்து உள்ளனர் . அப்போது மாநில அமைச்சர் மஸ்தான் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார். இவ்வாறு தமிழகம் திரும்பிய 5 பேரும் மருத்துவ மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. […]
