காதல் தகராறில் வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் உதயகுமார் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகிறார். இவருடன் பள்ளியில் படித்த தீபிகா என்ற பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயகுமாரும், அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். இதனை அடுத்து உதயகுமார் மோட்டார் சைக்கிளில் தீபிகாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த வாலிபர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக […]
