பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி விநாயகபுரத்தில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுசல்யா(25) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தங்களது மகளை அனுப்பி வைத்தனர். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கார்த்திக்கிடம் கவுசல்யா தெரிவித்துள்ளார்.அதன்படி கார்த்திக் கவுசல்யாவை அழைத்துவந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் […]
