காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண் ஒருவரை, காவல்துறையினர் மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். சேலம் அருகே உள்ள கருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சுற்றி திரிந்தார். தனியாக வந்த அந்தப் பெண்னை பார்த்த கருப்பூர் காவல்துறையினர், அவரை அழைத்து விசாரித்தனர். அதில், அந்த பெண்ணின் பெயர் ரீபா (எ) ராணி என்றும், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர […]
