தள்ளாடும் வயதில் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியை கணவர் தூக்கி சென்ற சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் தள்ளாடும் வயதில் நடக்க முடியாத தனது மனைவியை காரில் தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் மனைவியை காரிலிருந்து தூக்கி மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து மனைவிக்கு தடுப்பூசி போட்ட பிறகு அந்த முதியவர் […]
